கோவை: கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா : காவல்துறை சார்பில் சீர்வரிசை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழாவையொட்டி, காவல்துறை சார்பில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் கடைவீதி காவல் நிலையம் சார்பில் சீர் வரிசைகள் எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கடைவீதி காவல் நிலைய ஆய்வாள சசிகலா, கோனியம்மனுக்கு சீர் வரிசைகளை எடுத்துச் சென்றார். முன்னதாக கோவில் நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டினர். அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க காவல்துறையினர் பழங்கள், புடவைகள், பூமாலைகள் அடங்கிய சீர்வரிசைகளை எடுத்துச் சென்றனர். 

Night
Day