மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மன்சூர் அலிக்கானுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. நடிகர் மன்சூர் அலிகான், தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, நடிகை த்ரிஷா ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து திரை துறையினர் பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மன்சூர் அலிகான் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

Night
Day