சென்னை : பூசணிக்காயை வீட்டுவாசலில் வீசிய பூசாரி - வீட்டு உரிமையாளர் மாறி மாறி தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நெசப்பாக்கம் அருகே பூசணிக்காயை வீட்டு வாசலில் வீசியதால் கோவில் பூசாரிக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாரதி நகரில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் நீலகண்டன் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தினந்தோறும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூசணிக்காய் போன்ற பொருட்களை அங்குள்ள முருகன் என்பவரது வீட்டின் அருகே வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த முருகன் குடும்பத்தினர் நேற்று வீட்டிற்கு திரும்பிய போது வீட்டு வாசலில் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இதனை கண்டு ஆத்திரமடைந்து அக்குடும்பத்தினர் நீலகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

varient
Night
Day