திருவனந்தபுரம் : ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் திருவிழா - சிறப்பு ரயில்கள் இயக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வரும் 25-ஆம் தேதி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த 17-ஆம் தேதி முதல் காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதை ஒட்டி, பக்தர்களின் வசதிக்காக 25-ஆம் தேதியன்று 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் வழியாக 2 ரயில்களும், கொல்லம், கோட்டயம் வழியாக திருவனந்தபுரத்திற்கு 2 ரயில்களும் இயக்கப்படுமென திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day