ராமநாதபுரம் : சிவராத்திரி பூக்குழி உற்சவத்தை முன்னிட்டு பாய்மர படகு போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அருகே நடைபெற்ற பாய்மர படகு போட்டியில், வீரர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு படகுகளை இயக்கினர். திருப்பாலைக்குடியில் காமாட்சி அம்மன் கோயிலில் சிவராத்திரி பூக்குழி உற்சவத்தை முன்னிட்டு இளைஞர் சங்கம் சார்பில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. 21 படகுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் படகு ஒன்றுக்கு 6 பேர் வீதம் 126 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற் கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டன.

varient
Night
Day