கேரளா : கொல்லம் அருகே கடல் சீற்றம் - 5-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம், கொல்லம் அருகே கடல் சீற்றம் காரணமாக 5-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

கொல்லம் அருகே உள்ள வெடிகுன்னு பகுதியில் கடந்த 4 மாதங்களாகவே கடல் சீற்றத்தால் கடலோரத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக கடல் சீற்றம் அதிகம் உள்ளதால் இதுவரை கரையோரத்தில் இருந்த 5க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அதனால் வீடுகளை இழந்த பொதுமக்கள், முண்டக்கல் - இரவிபுரம் கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்தை விரைந்து பார்வையிட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Night
Day