சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாகும் விவகாரம் : உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறைச்சாலைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாகும் விவகாரத்தை தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமானதாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 196 குழந்தைகள் சிறையிலேயே பிறந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே பெண் கைதிகள் இருக்கும் பகுதிக்கு ஆண் ஊழியர்கள் செல்ல தடைவிதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

Night
Day