இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
டெல்லி எல்லையில் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை நிர்ணயம் செய்தல் தொடர்பான சட்டத்தை, நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக டெல்லி எல்லையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க டெல்லி எல்லையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாப், அரியானா எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற, பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி கயான் சிங் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திடீரென மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...