டெல்லி ரயில் நிலைய உயிரிழப்பு - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியான சம்பவத்துக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் முர்மு எக்‍ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்‍கி 18 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோருக்‍கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்‍கு ஆறுத​லும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்துள்ளார்.

Night
Day