தன்னை காண வரும்போது ஆதார் அட்டையுடன் வர வேண்டும் - கங்கனா ரணாவத் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொகுதி மக்கள் தன்னைக் காண வரும்போது ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்று இமாச்சல பிரதேசத்தின் மண்டி மக்களவை தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்துள்ளார். மண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம்முடைய அலுவலகத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், வெளிஆட்களும் வருவதால், இந்த திட்டத்தை அமல்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். தொகுதி மக்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தை தவிர்க்க, தொகுதி பிரச்னைகளை கடிதமாக எழுதி வரவேண்டும் என்றும் கங்கனா கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை தேர்தலில் கங்கனாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங், மக்கள் பிரநிதிதி என்ற முறையில், மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது அவருடைய பொறுப்பு என்றும், ஆவணங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே சந்திப்பேன் எனக் கூறுவது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.

Night
Day