ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் : பேரணியாகச் சென்ற வழக்கறிஞர்களால் பரபரப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை பாரிமுனை பகுதியில் வழக்கறிஞர்கள் நடத்திய பேரணியால் பதற்றமான சூழல் உருவானது. அப்போது திடீரென சில வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் உயர்நீதிமன்ற சாலை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திடீரென உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றி காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி பேரணியாக சென்று தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

Night
Day