தேர்தல்கள் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான போர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். வரும் ஜூன் மாதம் ஜெகனின் ஆட்சி காலம் முடியவுள்ள நிலையில், 2வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாபட்லா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, தேர்தல் என்னும் குருக்ஷேத்திரத்தில் ஆந்திர மக்கள் கிருஷ்ணர் எனவும் தான் அவர்களின் அர்ஜுனன் எனவும் கூறினார். இதுவரை தான் ஏழைகளின் சுயமரியாதையை மீட்டெடுத்துள்ளதாகவும், தான் இதை தொடர மக்களின் ஆதரவு வேண்டும் எனவும் வலியுறுத்திய ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேயான போராக இருக்கும் என தெரிவித்தார்.

Night
Day