6 மாத சிறைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஆம்ஆத்மி எம்.பி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருந்த ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்பி சஞ்சய் சிங், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஆறு மாதம் சிறையில் இருந்த சஞ்சய் சிங்கிற்கு தற்போது உச்ச நீதிமன்றம் பல்வேறு  நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. மேலும் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட, எவ்வித நிபந்தனையின்றி செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Night
Day