இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 29,954-ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 954-ஆக அதிகரித்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 70 ஆயிரத்து 325 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. கமால் அத்வான் மற்றும் அல்-ஷிஃபா மருத்துவமனைகளில் நீரிழிவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆறு குழந்தைகள் இறந்துவிட்டதாகவும், மற்றவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே மனிதாபிமான உதவிகள் காசாவை சென்று சேர விடாமல் இஸ்ரேல் தடுத்து வருவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது.

Night
Day