தன் மீதான பாலியல் குற்றசாட்டு உண்மைக்கு மாறானது - நிவின் பாலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் நடிகைகள் பட வாய்ப்புக்காக, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை, அண்மையில் வெளியானதை தொடர்ந்து மலையாளத் திரையுலக நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நடிகர் நிவின் பாலி பட வாய்ப்பு வழங்குவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், திரைப்படத்தில் தன்னை நடிக்க வைப்பதாக கூறி நடிகர் நிவின் பாலி துபாய்க்கு அழைத்து சென்று, 2023 நவம்பரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, நிவின் பாலி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் உட்பட ஆறு பேர் மீது ஊன்னுக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, தன் மீதான குற்றாச்சாட்டுக்கு மறுப்பு தெரித்துள்ள நடிகர் நிவின் பாலி, ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு தான் ஆளாக்கியதாக வெளியான செய்தி தவறானது என்றும், அது முற்றிலும் உண்மைக்கு மாறானது எனவும் தெரிவித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்று கூறியுள்ள நிவின் பாலி, அதற்கு தேவையான நடவடிக்‍கைகளை எடுப்பதன் மூலம் உண்மையை ​வெளிச்சத்துக்‍கு கொண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். 

Night
Day