அரசியல் கட்சிகளுக்கான சுயேட்சை சின்னம் நாளை ஒதுக்கீடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 30ம் தேதிக்கு பிறகு, அரசியல் கட்சிகளுக்கான சுயேட்சை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உரிமம் பெற்று உள்ள துப்பாக்கிகள் பெரும்பாலானவை ஒப்படைக்கப்பட்டதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்,ஒழுங்கு பிரச்சனை இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட சி-விஜில் செயலியில் ஆதாரங்களுடன் புகார்கள் தெரிவித்தால் 100 நிமிடங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். வரும் 30ம் தேதி வேட்பாளர்களின் வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு முடிந்தவுடன், சின்னம் இல்லாத கட்சிகளுக்கு சுயேட்சை சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

Night
Day