தூத்துக்குடி: தேவாலயத்தில் தடையை மீறி 'சேகர கமிட்டி' கூட்டம் - இருதரப்பினர் மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான பரி பேட்ரிக் தேவாலயத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சத்திரம் தெருவில் உள்ள தேவாலயத்தின் பங்குதந்தையாக இருக்கும் செல்வின்துரை என்பவர், புதிய சேகர கமிட்டி அமைத்தவுடன், உறுப்பினர்கள் நான்கு பேரை நீக்கி இருக்கிறார். இதனால், ஏற்பட்ட மோதலில், இனி, சேகர கமிட்டி கூட்டம் நடத்தக்கூடாது என காவல்துறை உத்தரவிட்டது. இதனிடையே, இன்று சேகர கமிட்டி கூட்டம் நடத்த முயன்றதை தடுத்த மற்றொரு தரப்புடன் மோதல் ஏற்பட்டது. இதனால், தேவாலயத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Night
Day