கன்னியாகுமரி: தலைமை காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலைய தலைமை காவலரை அதிரடிப்படைக்கு மாற்றியதால் விஷம் குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நித்திரவிளை பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தார். இந்த நிலையில் மீனவர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்ததால், மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் விசாரணை நடத்தி, கணேஷ்குமாரை அதிரடிப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனால் மதுபோதையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணேஷ்குமாரை, மற்ற காவலர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து நித்திரைவிளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

varient
Night
Day