தென்காசி: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்த இளைஞர் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கொல்லத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரயில், பாறைப்பட்டி அருகே வந்தபோது இளைஞர் ஒருவர் ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்வப் பிரதீப் என்பவர், பலரிடம் கடனாக பணத்தை வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Night
Day