நீலகிரி: 'ராங் ரூட்டில், ரைட் சொன்ன கூகுள் மேப்'- சிக்கிய பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் கூகுள் மேப் மூலம் காரில் சென்றவர்கள், திடீரென சாலையில்லாமல் சிக்கித் தவித்தனர். கேரளாவைச் சேர்ந்த பயணிகள், உதகை  செல்வதற்காக கூடலூர் வரை சென்றுவிட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கூகுள் மேப் மூலம், மாற்று வழியில் பயணித்திருக்கின்றனர். அக்ரஹாரம் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் சென்றபோது, 500 மீட்டருக்கு பிறகு சாலை முடிவடைந்து நின்றுள்ளது. அது குறுகிய சாலை என்பதால், காரை திருப்ப முடியாமல் அவர்கள் சிக்கி தவித்தனர். செய்வதறியாது திகைத்த அவர்களை ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்ட பொதுமக்கள், மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு அனுப்பி வைத்தனர். 

varient
Night
Day