பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம், அக்ராஹாரப்பட்டி இரட்டை பாலத்தில் பழுதாகி நின்ற லாரியின் பின்னால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

மதுரை நோக்கி சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி பாலத்தில் பழுதாகி நின்றது. அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், பைக்கில் வந்த செல்வம், வினோத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து பின்னால் வந்த மினி சரக்கு வாகனமும் லாரியின் மீது மோதியதில் வாகன ஓட்டுநர் வேல்முருகன் உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  
விசாரணை நடத்தினர்.

Night
Day