பாமக தலைவர் அன்புமணி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் சிந்துபூந்துறையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாமக தலைவர் அன்புமணி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 

கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் இடத்தை ஆய்வு செய்த பாமக தலைவர் அன்புமணி அங்கு கூடியிருந்த மக்கள், மற்றும் கட்சி தொண்டர்களை ஒன்று திரட்டி அனுமதியின்றி போராட்டம் நடத்தினார். இதையடுத்து காவல்துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக போலீசார் அன்புமணி மீது வழக்குபதிவு செய்துள்ளனர். விரைவில் சம்மன் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day