அறிமுக போட்டியிலேயே சர்ஃபராஸ் கான் அரைசதம் விளாசல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அறிமுகமான முதல் போட்டியிலேயே இந்திய வீரர் சர்ஃபராஸ் கான் அரை சதம் விளாசி அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் ரோகித் சர்மா - ஜடேஜா இருவரும் 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இதனால் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்களை குவித்துள்ளது. போட்டியின்போது ரோகித் சர்மா ஆட்டமிழந்த பின் அடுத்தடுத்து வரும் வீரர்களை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று இங்கிலாந்து வீரர்கள் எண்ணிய போது, களமிறங்கிய சர்ஃபராஸ் கான் இங்கிலாந்து அணி வீரர்கள் வீசிய பந்தை பொளந்து கட்டினார். அதிரடியாக ரன்களை சேர்த்த அவர், 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Night
Day