கரூர்: கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் மாசி மக தெப்ப திருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் மாசி மக தெப்ப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. கொடி கம்பத்திற்கு கோரைப் புல், வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கொடிகம்பத்தில் உள்ள கருடாழ்வாருக்கும், கொடி மரத்திற்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Night
Day