மே மாதம் 10ம் தேதி கேதார்நாத் கோயில் நடை திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்டிலுள்ள கேதார்நாத் கோயில் வருகிற மே மாதம் 10ம் தேதி திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கேதார்நாத் சிவன் கோயில், கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி குளிர் காலத்தை முன்னிட்டு மூடப்பட்டது. இதனிடையே வருகின்ற மே 6ம் தேதி பஞ்சமுகி டோலியுடன் யாத்திரை தொடங்கப்படும் என்று கோயல் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். மே 10ம் தேதி கேதார்நாத் கோயிலை அடைந்தவுடன் கோயிலின் நடை திறக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

varient
Night
Day