மக்களவை தேர்தலுக்கான பிரசார பயணத்தை ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் தொடங்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலுக்கான பிரசார பயணத்தை ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் கெஜ்ரிவால் என்ற முழக்கத்தை கருப்பொருளாக கொண்டு இந்த பிரசார பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பரப்புரை பயணத்தை ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தனது குடும்பத்தினராக விளங்கும் டெல்லி மக்களுக்காக சேவை செய்ய தாம் விரும்புவதாகவும், ஆனால் ஒரு சாதாரண மனிதரை மத்திய ஆட்சியில் அமர்த்தியதால், டெல்லி மக்களை அவர்கள் வெறுப்பதாக, பாஜகவை மறைமுகமாக சாடினார். 

Night
Day