விருதுநகர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை வெள்ளி சிறப்பு வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் சாத்தூர் அருகே பிரசித்திப் பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தை மாத கடைசி வெள்ளியையொட்டி, மாரியம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, பஞ்ச ஆரத்தியுடன் பல்வேறு தீபஆரத்திகள் காண்பிக்கப்பட்டன. பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், உருண்டு கொடுத்தும், அக்னி சட்டி எடுத்தும் தங்களது நீண்ட நாள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். 

Night
Day