"பாஜக அரசு குறித்து கேள்வி எழுப்ப எந்த உரிமையும் இல்லை" - ஆம் ஆத்மி மீது டெல்லி முதலமைச்சர் ஆவேசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக அரசு குறித்து கேள்வி எழுப்ப ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த உரிமையும் இல்லை என்று டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கூறியுள்ளார். 


முன்னாள் முதலமைச்சர் அதிஷி வெளியிட்ட வீடியோ ஒன்றில், பதவியேற்றவுடன் பெண்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதாக கூறிய பாஜக, வாக்குறுதியை மீறி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் ரேகா குப்தா, ஆம் ஆத்மி 13 ஆண்டுகள் ஆட்சி செய்த போது என்ன செய்தார்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, ஆட்சி அமைத்த ஒரு நாளில் பாஜக அரசு மீது கேள்வி எழுப்ப அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார். 

Night
Day