ஆன்மீக சுற்றுலா பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆன்மீக சுற்றுலாப் பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். உத்தராகண்டிலிருந்து டேராடூன் நோக்கி ஆன்மீக சுற்றுலா பேருந்து பக்தர்களுடன் சென்று கொண்டிருந்தது. ஹரித்வார் பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day