ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் தொடர்புடைய இடங்களில் ரெய்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடந்த நீர் மின் உற்பத்தி திட்ட ஊழல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் இல்லம் உள்பட 30 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச ஆளுநராக சத்ய பால் மாலிக் பதவி வகித்த போது, நீர் மின் சக்தி திட்டத்தில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது. நீர்மின் சக்தி திட்ட கட்டுமான காப்பீட்டு தொகையில் ஊழல் நடந்ததாக கூறப்பட்டதால், இது தொடர்பாக சத்ய பால் மாலிக்கிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது சத்யபால் மாலிக்கின் வீடு, உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்பட 30 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

Night
Day