டாங்கி வெள்ளத்தில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லடாக் எல்லை கட்டுப்பாட்டு பகுடியில் பீரங்கி வாகனம் வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

லடாக்கின் தௌலத் பெக் ஓல்டி பகுதியில் நேற்று பீரங்கி வாகனம் மூலம் ஆற்றை கடக்கும் பயிற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது, ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்துள்ளது. இதனால், பீரங்கி வாகனம் விபத்துக்குள்ளாகி 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டி-72 டேங்கில் இருந்த வீரர்கள் அதிகாலை 1 மணியளில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இச்சம்பவம் நடைபெற்றதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day