டெல்லியில் மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் அரசு போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மக்களுக்காக தாங்கள் அனைவரும் போராடி வருவதை காட்டவே டெல்லி வந்துள்ளதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கர்நாடகா மாநிலத்திற்கு முறையான நிதி பங்கீடு வழங்கக்கோரி கர்நாடக காங்கிரஸ் அரசு போராட்டம் நடத்தி வருகிறது. இதில், முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்பட அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, பேசிய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், நாட்டிற்கு அதிக வருமானம் தரும் 2வது பெரிய மாநிலம் கர்நாடகா தான் என்றும், தாங்கள் தங்கள் உரிமைகளையும், பங்கையும்தான் கேட்பதாக தெரிவித்தார். 

Night
Day