அவிடிவ்கா நகரை விட்டு படைகள் வெளியேறுவதாக உக்ரைன் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிழக்கு உக்ரைனின் அவிடிவ்கா நகரில் இருந்து படைகள் வெளியேறுவதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிய நிலையில் சில வாரங்களில் போர் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் அளித்த ஆயுதம் மற்றும் பொருளாதார உதவியால் வரும் 24-ம் தேதியுடன் இரண்டாம் ஆண்டை போர் நிறைவு செய்கிறது. இப்போரில ரஷ்யாவுக்கு கடும் சவால் அளித்தாலும் பல நகரங்களை உக்ரைன் இழந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 4 மாதங்களாக ரஷ்யாவின் முற்றுகையை எதிர்த்து நின்ற அவிடிவ்கா நகரை விட்டு படைகள் வெளியேறுவதாக உக்ரைன் ராணுவ தளபதி அலெக்சாண்டர் சிர்ஸ்கி அறிவித்துள்ளார். ஆயுதங்கள் மற்றும் உணவு தட்டுப்பாடே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Night
Day