பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழை - 21 குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக 21 குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் உள்ளிட்ட இடங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு 700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி 21 குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், முக்கிய இணைப்பு சாலைகளில் பல மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

Night
Day