போலந்து நாடாளுமன்றம் முன்பு டயர்களை தீயிட்டு எரித்து விவசாயிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போலந்து அரசாங்கத்தின் வேளாண் கொள்கை முடிவுகளை கண்டித்து, விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமை ஒப்பந்த திட்டம் மற்றும் உக்ரைன் விளைபொருட்களின் இறக்குமதியை ஊக்குவிப்பது ஆகியற்றுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள போலந்து விவசாயிகள், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தலைநகர் வார்சாவில் திரண்ட ஏராளமான விவசாயிகள், நாடாளுமன்றத்துக்கு முன்பு டயர்களை எரித்தும் பட்டாசுகளை கொளுத்தியும் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். அப்போது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். 

Night
Day