காரை திருட முயன்ற மர்ம நபரின் - வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட வேங்கிக்கால்புதூர் பகுதியில் காரை திருட முயற்சித்த மர்ம நபரின் வீடியோ வைரலாகி உள்ளது. வேங்கிக்கால்புதூர் பகுதியில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது, இந்த விடுதி அருகே நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை நோட்டம் விட்டார். கார்கள் லாக் ஆகியுள்ளதா இல்லையா? என சோதித்து பார்த்தார். இரண்டு கார்களை அவ்வாறு பார்த்தபோது, இரண்டுமே லாக் ஆகியிருந்ததால் ஏமாற்றமடைந்த அந்த நபர் எந்த பதற்றமும் இல்லாமல் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் விடுதியில் உள்ள சிசிடிவிவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த காட்சிகளை கார் உரிமையாளர் அருகே உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு அனுப்பி  பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

Night
Day