சீருடையில் இருந்த பெண் காவலரை கத்தியால் வெட்டிய கணவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலரை, அவரது கணவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரமடம் அருகே சாலையில் உள்ள இந்தியன் வங்கி வெளியே பெண் காவலர் டில்லி ராணி நின்றிருந்தார். அப்போது பெண் காவலரின் கணவர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சீருடையில் இருந்த பெண் காவலரை தலை, கை, கழுத்து என சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதனால் ரத்த வெள்ளத்தில் இருந்த பெண் காவலரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குடும்ப தகராறு காரணமாக பெண் காவலரை அவரது கணவர் வெட்டியதாக கூறப்படுகிறது.

Night
Day