மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்யப்பட்டு கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது காதலியை மிரட்டியதற்காக, கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரை கொலை செய்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது ரசிகரை கொலை செய்வதற்கு முன்னதாக அவரது மர்ம உறுப்பில், மின்சாரம் பாய்ச்சியதாக உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலட்சுமியை விட்டு பிரிந்து பவித்ரா கவுடாவை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர் ரேணுகா சுவாமி, தர்ஷனை விட்டு விலகுமாறு, பவித்ராவுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதன் காரணமாக கோபமடைந்த, தர்ஷன், தனது ஆட்களை ஏவி, ரேணுகா சுவாமியை கொன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது பிரேத பரிசோதனை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் அவரது மர்ம உறுப்பு உள்ளிட்ட 34 இடங்களில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் போலீசாரின் விசாரணையில், பவித்ராவுக்கு தன் மர்ம உறுப்பு படத்தை ரேணுகாசாமி அனுப்பியதால், அவரது மர்ம உறுப்பில் மின்சாரம் வைத்து கொலை செய்ததாக கைதானவர்கள் தகவல் தெரிவித்ததாக கூறுப்படுகிறது.

Night
Day