வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இருணாப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் திருப்பதி. இவர், வழக்கமாக இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வாகனத்தை லாவகமாக திருடிச் சென்றுள்ளார். திருப்பதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Night
Day