ஹரியானா: மகளை கொன்று பல்கலை. உதவி பேராசிரியர் தானும் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானாவில் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தனது 8 வயது மகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். ஹிசர் பகுதியில் உள்ள லாலா லஜ்பத்ராய் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த சந்தீப் கோயல் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பல்கலைக்கழகத்திற்கு தனது மகளை அழைத்தச் சென்ற சந்தீப் கோயல், அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் மகளின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த தகவலின்பேரில் ஹிசர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day