ஆதார் விவரங்களை புதுப்பிக்க ஜூன் 14-ம் தேதி வரை அவகாசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வழங்கப்பட்டு, பெயர், முகவரி, கைரேகை பதிவுகள் ஆகியவை புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அவை உடனே புதுப்பிக்கப்பட வேண்டும். பல விதமான மோசடிகளை தடுக்கவும், நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, ஆதார் புதுப்பித்தல் இலவச சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும் எனவும், ஆஃப்லைன் முறையில், ஆதார் மையங்களுக்கு சென்று இந்த சேவையை பெற 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day