ஈரோடு: 2 மாத குட்டி யானையை தாயுள்ளத்தோடு பராமரிக்கும் வனத்துறையினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வயது முதிர்வால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். பண்ணாரி கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று சோர்வாக சுற்றித்திரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிப்பதுடன், அதன் 2 மாத பெண் குட்டி யானைக்கும் புட்டி பால் கொடுத்து பராமரித்து வருகின்றனர். உடல் நலமற்ற யானையை காண வந்த மற்ற யானைகளையும் வனத்துறையினர் வெடிவைத்து விரட்டினர். 

Night
Day