ஏற்காட்டில் அலை மோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காணும் பொங்கலையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் தாவரவியல் பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. படகு இல்லத்திலும் நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். மக்கள் நிறைந்திருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Night
Day