தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
சாதி சான்றிதழ் கேட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குடுகுடுப்பைக்காரர்கள் 10 பேர், குடுகுடுப்பை அடித்துக் கொண்டே கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மூங்கில்துறை பட்டு கிராமத்தில் வசித்து வரும் குடுகுடுப்பைக்காரர்கள் சமூகத்தைச் சேர்ந்த காக்கிச்சட்டை- தனம் தம்பதி குடும்பத்தில் உள்ள குழந்தைகள் தொடக்க கல்வி முதல் கல்லூரி வரையில் பயின்று வருகின்றனர். இந்த நிலையல், இதுநாள் வரை இவர்களுக்குஅரசு சார்பில் சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சாதி சான்றிதழ் இல்லாததால் தங்கள் குழந்தைகள் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, சாதி சான்று கேட்டு குடுகுடுப்பை அடித்துக் கொண்டே ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...