திருப்பூர்: ரயில் பயணிகளிடம் செல்போன் திருடிய உ.பி. இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடமாநிலங்கள் செல்லும் ரயில்களில் செல்போன்களை திருடிவந்த உத்தரபிரதேச இளைஞர் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் செல்போன் திருட்டு புகார் குறித்த தொடர் புகார் எதிரொலியாக, சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள், திருப்பூர் ரயில் நிலையத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த இளைஞர் வடமாநிலங்கள் செல்லும் ரயில்களில் தொடர்ந்து செல்போன் திருடி வந்ததும், ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இளைஞரை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.

Night
Day