தமிழகம்
போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ஒற்றையானை தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சானமாவு வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது காட்டு யானை ஒன்று வெளியேறி, அருகே உள்ள விளை நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனுமந்தபுரம் பகுதியில் மமத்தா என்ற இளம்பெண் இருசக்கரவாகனத்தின் பின்னால் அமர்ந்து வேலைக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஒன்றை யானை தாக்கியதில், இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையறிந்த கிராம மக்கள், யானை விரட்டக்கோரி, இளம்பெண்ணின் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உத்தனப்பள்ளி - கெலமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...