சென்னையில் இரண்டு நாள் நடைபெறும் போன்சாய் கண்காட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பானிய கலை வடிவத்தை எடுத்துரைக்கும் வகையில், சென்னையில் இரண்டு நாள் நடைபெறும் போன்சாய் கண்காட்சியை, போன்சாய் ஆர்வலர்கள் கண்டுகளித்து வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீ சங்கரா ஹாலில், போதி சென்னை போன்சாய் அசோசியேஷன் சார்பில், இரண்டு நாள் போன்சாய் கண்காட்சி தொடங்கியுள்ளது. இதனை சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தின் கன்சல் ஜெனரல் டாகா மசாயுகி குத்துவிளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில் கெளரவ விருந்தினராக சர்வதேச போன்சாய் கலைஞர் கௌரப் மஜும்தார் மற்றும் ரிஜி மாலதி பாண்டுரங், சென்னை போன்சாய் அசோசியேஷன் தலைவர் யோகேஷ் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் போன்சாய் மரம் வளர்ப்பது பராமரிப்பது முதலிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Night
Day