சென்னை : பிரதமர் மோடி வருகை - கல்பாக்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 5 மணியளவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ-வில் நடைபெறும் "தாமரை மாநாடு" என்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் வருகையின் போது, ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 15 ஆயிரம் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும், 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

Night
Day