திண்டுக்கல்: குழந்தை கடத்துபவன் என நினைத்து மனநலம் பாதித்தவருக்கு தர்ம அடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 'குழந்தை கடத்துபவன்' என நினைத்து மனநலம் பாதித்த நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். கடந்த சில நாட்களாக ஒட்டன்சத்திரம் பகுதியில் மர்ம கும்பல் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில், கொம்பேறிப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் சுற்றித் திரிவதைக் கண்ட பொதுமக்கள், அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து, பொதுக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து சென்ற வடமதுரை போலீசார் அந்த நபரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Night
Day