தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாத்துமதுரையைச் சேர்ந்த சுபா என்பவர் உடல் நலக்குறைவால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காணச்சென்ற உறவினர் திவாகர் நோயாளியின் கட்டில் மேல் அமர்ந்துள்ளார். அப்போது பயிற்சி மருத்துவர் விஷால், பெண்கள் வார்டு எனக்கூறி திவாகரை வெளியேற கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டபோது, அதனை தடுக்க முயன்ற சுபாவை, பயிற்சி மருத்துவர் விஷால் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுபாவும் அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து பயிற்சி மருத்துவர் விஷால் அளித்த புகாரின்படி, வேலூர் தாலுகா போலீசார் திவாகர், சுபா இருவர் மீதும் வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...